வீரன் அழகு முத்து கோன்
வீரன் அழகு முத்து கோன்
வீரன் அழகு முத்து கோன் (1728-1757) ஜெகவீரராமபாண்டி எட்டப்பன் என்கிற எட்டயபுரம் அரசருக்கு நண்பனாக இருந்தவர். அழகுமுத்து சேர்வைக்காரனின் தந்தை கட்டாலங்குளம் பகுதியை அரசாலும் உரிமையை, மதுரையை ஆண்ட மன்னர் முதலாம் கிருஷ்ணப்ப நாயக்கர் குமாரர் பெரிய வீரப்ப நாயக்கர் அவர்களிடம் ஒரு செப்பேட்டின் மூலம் பட்டயம் பெற்று அரசாண்டார்(குடி உயர கோன் உயர்வான்). கப்பம் கட்ட மறுத்து முதன் முதலாக ஆங்கிலேயர்களை எதிர்த்ததாலும் மருதநாயகம் யூசுப்கான்சாகிப்பை எதிர்த்து பெத்தநாயக்கனூர் கோட்டையில் போரிட்டு அதில் வீரன் அழகுமுத்து கோன் மற்றும் 5 படைத்தளபதிகளும் மற்றும் 200 போர் வீரர்களும் பீரங்கி வாயில் வைத்து சுடப்பட்டு இறந்தனர். பீரங்கி முன் நின்ற சாகும் தருவாயிலும் தன்னைச் சேர்ந்தவர்களை காட்டிக்கொடுக்க மாட்டேன் ஆங்கிலேயனுக்கு அடிபணியவும் மாட்டேன் என்று கூறிய நெஞ்சுரம் மிக்கவர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 |
வீரன் அழகு முத்து கோன் |
 |
குருசாமி யாதவ் |
உதித்து வந்த சூரியனில் குதித்து வந்த வீரகண்ணா!
நீ எதிர்த்து வரும் படைகள் அனைத்தையும் போர் தொடுத்து
வென்ற வேங்கையடா ! வீர இனம் யாதவ இனம் என்று தெரிந்து
வீறுகொண்டு எழ! இங்கு பிறந்தாயோ !
எங்கள் வீர இனம் ஆயர்குலத்தில் வளர்ந்து கம்சனை
வதம் செய்ய கண்ணனாக பிறந்தாய் !
வெள்ளையனை வதம் செய்ய மாவீரன் அழகு முத்து
கோனாக பிறந்தாய் !
எதிரிகளை வதம் செய்ய மாவீரன் குருசாமி
யாதவராய் பிறந்தாய் !
நம் இந்திய மண்ணில் யாதவன் தலை நிமிர்ந்து வாழ மீண்டும் யாதவ குலத்தில் மாவீரனாய் பிறக்க வேண்டும் கண்ணா ...,!
No comments:
Post a Comment